வியாழன், 21 நவம்பர், 2013

ஐயப்பன் 108 சரணகோஷம்.


மாலை அணிந்த ஸ்வாமிமார்கள் இந்த சரணகோஷத்தை தினமும் காலை,மாலை இரண்டு வேளையும் நீராடிவிட்டு ஜயப்பனிற்கு பால்,பழம்,கற்கண்டு முதலியவற்றை நிவேதனம் செய்து சரணம் சொல்லி வழிபடவேண்டும்.

ஐயப்பன் விரதம்

ஐயப்பன் விரத விதிமுறைகள்.

1-முதன் முறை மாலை அணியும் பக்தர் கன்னி ஸ்வாமி என அழைப்பார்கள்.2-ஜந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்குச் சென்றவாராயும், ஜயப்பனின் விரதமுறையை நன்கு உணர்ந்தவராயும்,பொறுமையும் ஆசாரசீலராகவும் உள்ள ஒருவரை குருஸ்வாமியாய் ஏற்று தாய்,தந்தையரை வணங்கி குருவின் கையால் மாலை அணிதல் வேண்டும்.