திங்கள், 1 செப்டம்பர், 2025

விரதங்களும் பலன்களும்

 

விரதங்களும் அவற்றின் பலன்களும்




    viratham and benefits in tamil

Viratham and Benefits in Tamil

விரதங்களும் அவற்றின் பலன்களும்


திருக்கார்த்திகை

 

திருக்கார்த்திகை – கார்த்திகை தீபத்தின் வரலாறு

karthigai deepam history in tamil


திருவெம்பாவை

 

மார்கழி பாவை நோன்பு – திருவெம்பாவை


margazhi-paavai-nombu


சுவாமிமலை

 

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில்



swaminatha swamy swamimalai murugan temple

திருச்செந்தூர்

 

திருச்செந்தூர் thiruchendur-murugan

  • Share @
  •  
  •  
  •  
  •  

About Thiruchendur Murugan Temple in Tamil

திருச்செந்தூர் முருகன் பற்றிய தகவல்கள்


திருப்பரங்குன்றம்

 

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

thiruparankundram murugan temple subramanya swamy

பழமுதிர்ச்சோலை

 

பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்



pazhamudircholai murugan temple

Pazhamudircholai Temple History in Tamil

பழமுதிர்ச்சோலை முருகன் திருக்கோவில்


பழனி

 

அருள்மிகு தண்டாயுதபாணி கோவில், பழனி


palanimalai murugan

திருத்தணி

 

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருத்தணி

thiruthani murugan temple history tamil

ன் கோவில்

அறுபடை வீடு

 

Murugan Arupadai Veedugal

Murugan Arupadai Veedugal

மிகுந்த ஆன்மீக இன்பத்தைப் பெற முருகப் பெருமானின் ஆறு பிரசித்தி பெற்ற இருப்பிடங்களுக்குச் செல்வோம்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளை மகிழ்ச்சியுடன் தரிசிப்போம், அவை பின்வருமாறு:-

  1. திருத்தணி

தைப்பூசம்

 

தைப்பூசம் – திருவிழா, தைப்பூச விரதம்


    thaipusam

கே.பி. சுந்தராம்பாள்

 

முத்தமிழ் வித்தகி தமிழிசைப் பேரறிஞர்

கே.பி.எஸ். என்ற கே.பி.சுந்தராம்பாள் என்ற கொடுமுடி பாலாம்பாள்

முருகனின் வடிவமைப்புக்கள்

 

கந்தர் ஷஷ்டி கவசம்

 

கந்தர் ஷஷ்டி கவசம்
(Kandar Shashti Kavacham)

(தேவராய ஸ்வாமிகள் அருளியது)
(thEvaraaya suvaamigaL aruLiyadhu)

கந்தர் சஷ்டி கவசத்தை ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் இயற்றி உள்ளார்கள். இது முருகனின் அருளைப் பெறுவதற்காக இயற்றப்பட்டது. நமது வாழ்க்கையில் முன்னேற இது நமக்கு கிடைத்துள்ள ஒரு பொக்கிஷம் ஆகும்.

முருகனின் அருளை வேண்டுவதற்காக அவர் கந்தர் சஹ்டி கவசத்தை பாடுகிறார். இந்த கவசத்தை நாமும் தினமும் படிப்பதினால், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களும் விலகும். மழலை செல்வம் இல்லாதவர்கள் மழலை செல்வம் பெறுவார்கள். வாழ்வில் வளமும், வசந்தமும் பெருகும். இதைப் படிப்பதின் மூலம் உலகின் அனைத்து இன்பங்களையும் பெறுவார்கள். ஒரு போர்வீரன் யுத்தத்திற்குச் செல்லும் முன்னதாக அணியும் கேடயம் போல, நம்முடைய வாழ்க்கையில் கந்தர் சாஸ்தி கவசம் ஒரு கேடயமாக நின்றிருந்தபடி நம்மைக் காக்கும்.

கந்தர் அநுபூதி

 

--ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள்

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

சனி, 7 பிப்ரவரி, 2015

சத்தியவான் சாவிதிர் வில்லிசை சின்னமணி 1


சத்தியவான் சாவிதிர் வில்லிசை சின்னமணி 2


சத்தியவான் சாவிதிர் வில்லிசை சின்னமணி 3


சத்தியவான் சாவித்திரி வில்லிசை சின்னமணி 4


சத்தியவான் சாவிதிரி வில்லிசை சின்னமணி 5


செவ்வாய், 10 டிசம்பர், 2013

திருவெம்பாவை...

திருவெம்பாவை... 1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் 
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் 
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் 
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

Foto: தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்...?
எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ,முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!
 என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.

அது மட்டுமல்ல தேங்காய் , வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால்,தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல,வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்...!!!!தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்...?
எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ,முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!
என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.

அது மட்டுமல்ல தேங்காய் , வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால்,தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல,வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்...!!!!

பிள்ளையார் கதை பாடல்...!!

Foto: பிள்ளையார் கதை பாடல்...!!!
இப் பாடலை 21 நாளும் விரதமிருந்து துதி 
செய்ய நினைத்த காரியம் கைகூடும் .சகல 
செல்வயோகம் மிக்க பெரு வாழ்வு வாழலாம் ..!!! 

சிறப்புப் பாயிரம்
செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையில் உள் ளதுவும்
இலிங்க புராணத்து இருந்தநற் கதையும்
உபதேச காண்டத்து உரைத்தநற் கதையும்
தேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்கு
வாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாதன் அளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே.

காப்பு
கரும்பு மி்ளநீருங் காரெள்ளுந் தேனும்
விரும்பு மவல்பலவும் மேன்மே - லருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்க டீர்க்குங்.
கணபதியே யிக்கதைக்குக் காப்பு. 

திருவிளங்கு மான்மருகா சேவதனி லேறி
வருமரன்றா னீன்றருளு மைந்தா - முருகனுக்கு 
முன்பிறந்த யானை முகவா வுனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.

விநாயகர் துதி
திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை. 

ஒற்றை யணிமருப்பு மோரிரண்டு கைத்தலமும் 
வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தி லெப்பொமுதுங் 
கொண்டக்கால் வராது கூற்று. 

சப்பாணி
எள்ளு பொரிதேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்
வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்
வெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியேகொட்டி அருள்க சப்பாணி.

சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.

'சரஸ்வதி துதி'
புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி
முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ்
செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே
எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல்/இசை நாடகம் என்னும்
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன்
சித்தந் தனில்நீ இருந்து திருவருள் செய்திடுவாயே.
அதிகாரம்
பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்
செந்தமிழ் வகையாற் றெளிவுறச் செப்பினன்
அன்னதிற் பிறவினில் அரில்தபத் திரட்டித்
தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே.
[அரில் = குற்றம்.]

நூல்: 
மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர் 
இந்துவளர் சோலை இராசமா நகரியில்

அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ் 
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்

கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையுந்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்

புதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற 
மதர்விழி பாகனை வழிபடு நாளின்

மற்றவர் புரியும் மாதவங் கண்டு 
சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப் [10]

பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே 
அரனே மறையவற்கு அருள்புரிந்து அருளென

அந்தஅந் தணனுக்கு இந்தநற் பிறப்பில் 
மைந்தரில்லை யென்று மறுத்து அரன் உரைப்ப

எப்பரி சாயினும் எம்பொருட்டு ஒருசுதன் 
தப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென 

எமையா ளுடைய உமையாள் மொழிய 
இமையா முக்கண் இறைவன் வெகுண்டு

பெண்சொற் கேட்டல் பேதைமை யென்று 
பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப் [20]

பேதாய் நீபோய்ப் பிறவென மொழிய
மாதுஉமை யவளும் மனந்தளவு உற்றுப்

பொன்றிடு மானுடைப் புன்பிறப்பு எய்துதல்
நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்

கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து
பிறைநுத லவற்குநீ பிள்ளை யாகச்

சென்று அவண் வளர்ந்து சிலபகல் கழித்தால் 
மன்றல்செய் தருள்வோம் வருந்தலை யென்று

விடைகொடுத்து அருள விலங்கன்மா மகளும்
பெடைம யிற்சாயற் பெண்மக வாகித் [30]

தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன் 
சீர்மலி மனைவி திருவயிற் றுதித்துப்

பாவை சிற்றிலும் பந்தொடு கழங்கும் 
யாவையும் பயின்ற இயல்பின ளாகி

ஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும் 
மையார் கருங்குழல் வாள்நுதல் தன்னை

மானுட மறையோற்கு வதுவை செய்திடக் 
கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்

பிறப்பிறப் பில்லாப் பெரியோற்கு அன்றி 
அறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என [40]

மற்றவன் தன்னைஉன் மணமக னாகப் 
பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச

அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யானெனக் 
கருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைத்து

மருமலி கமல மலர்த்தடத்து அருகில் 
தருமலி நிழல் தவச் சாலையது அமைத்துப்

பணியணி பற்பல பாங்கியர் சூழ 
அணிமலர்க் குழல் உமை அருந்தவம் பயில

அரிவைதன் அருந்தவம் அறிவோம் யாமென 
இருவரு மறியா விமையவர் பெருமான் [50]

மான் இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து 
மானிட யோக மறையவன் ஆகிக் 

குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு 
மடமயில் தவம்புரி வாவிக் கரையில் 

கண்ணுதல் வந்து கருணை காட்டித் 
தண்நறும் கூந்தல் தையலை நோக்கி 

மின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ 
என்பெறத் தவமிங்கு இயற்றுவது என்றலும் 

கொன்றை வார்சடையனைக் கூடஎன்று உரைத்தலும் 
நன்று எனச் சிரித்து நான்மறை யோனும் [60]

மாட்டினில் ஏறி மான்மழுத் தரித்துக் 
காட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்

பாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ் 
சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப் 

பிச்சைகொண்டு உழலும் பித்தன் தன்னை 
நச்சிநீ செய்தவம் நகைதரும் நுமக்கெனப் 

பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும் 
ஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச் 

சேடியர் வந்து செழுமலர் குழலியை 
வாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச் [70]

சிந்துர வாள்நுதற் சேடியர் தாம்போய்த் 
தந்தைதா யிருவர் தாளினை வணங்கி 

வாவிக் கரையில் வந்தொரு மறையோன் 
பாவைதன் செங்கையைப் பற்றினான் என்றலுந் 

தோடு அலர்கமலத் தொடைமறை முனியை 
ஆடக மாடத்து அணிமனை கொணர்கஎன 

மாடக யாழ்முரல் மங்கையர் ஓடி 
நீடிய புகழாய் நீஎழுந்து அருள் என 

மைம்மலர்க் குழலி வந்துஎனை அழைக்கில் 
அம்மனைப் புகுவன் என்று அந்தணன் உரைத்தலும் [80]

பொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற 
நற்றவ முனியை நடாத்திக் கொணர்கெனச் 

சிவனை இகழ்ந்த சிற்றறி வுடையோன் 
அவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று 

சிற்றிடை மடந்தையுஞ் சீறினள் ஆகி 
மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி 

நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லதென் 
பொற்புஅமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்

மானிட வேட மறையவன் தனக்கு 
யான்வெளிப் படுவ தில்லையென்று இசைப்ப [90]

மலையிடை வந்த மாமுனி தன்னை 
இணையடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத் 

தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச் 
சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து

தாய்சொல் மறுத்தல் பாவமென்று அஞ்சி 
ஆயிழை தானும் அவனெதிர் சென்று 

சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி 
மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து 

ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும் 
வேதியன் பழைய விருத்தன் என்றெண்ணி [100]

ஆசனம் நல்கி அருக்கியம் முதலாப் 
பாத பூசனைகள் பண்ணிய பின்னர்ப் 

போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய் 
ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை 

தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து 
அந்தணன் தன்னை அமுதுசெய் வித்துச் 

சந்தனங் குங்குமச் சாந்துஇவை கொடுத்துத் 
தக்கோ லத்தொடு சாதிக் காயும் 

கற்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு 
வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் [110]

ஒள்ளிய தட்டில் உகந்து முன்வைத்துச் 
சிவனெனப் பாவனை செய்து நினைந்து 

தவமறை முனிவனைத் தாளினை வணங்கத் 
தேனமர் குழலி திருமுக நோக்கி 

மோனமா முனிபுன் முறுவல் காட்டிக் 
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும் 

நெற்றியில் நயனமும் நீல கண்டமும் 
மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக் 

கூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல் 
வரந்தரு முதல்வன் மடமயில் காணக் [120]

கரந்ததன் உருவங் காட்டி முன்நிற்ப 
மரகத மேனி மலைமகள் தானும் 

விரைவொடுஅங்கு அவன் அடி வீழ்ந்துஇறைஞ் சினளே 
அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர் 

கருடர் கின்னரர் காய வாசியர் 
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர் 

பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை 
சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க் 

கணிக்கரும் பதினெண் கணத்தில் உள்ளவரும் 
மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின் [130]

மன்றல் அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத்
தென்றல் வந்துஇலங்கு முன்றில் அகத்துப் 

பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி 
மாணிக் கத்தால் வளைபல பரப்பி 

ஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து 
நித்தில மாலை நிரைநிரை தூக்கிப் 

பக்திகள் தோறும் பலமணி பதித்துத் 
தோரணம் நாட்டித் துகில்விதா னித்துப் 

பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத் 
திக்குத் தோறும் திருவிளக் கேற்றிப் [140]

பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக் 
கன்னலுங் கழுகுங் கதலியும் நாட்டிப்

பன்மலர் நாற்றிப் பந்தர் சோடித்து 
நலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக் 

குலவிய திருமணக் கோலம் புனைந்தார் 
வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத் 

திருமணக் கோலஞ் செய்தன ராங்கே 
எம்பி ரானையும் இளங்கொடி தன்னையும் 

உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக் 
கடலென விளங்கும் காவணந் தன்னில் [150] 

[151 முதல் 199 வரை] [சிவன், உமை திருக்கல்யாணமும், விநாயகர் அவதாரமும் இதில் கவனிக்கத் தக்கது.]

சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையி்ல் 
மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்து உடன் இருத்திப் 

பறையொ லியோடு பனிவளை ஆர்ப்ப 
வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே 

சதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத் 
தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச் 

சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின் 
அரிவலஞ் சூழ எரிவலம் வந்து 

பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப் 
போதுஅணி கருங்குழற் பூவை தன்னுடனே [160]

ஓதநீர் வேலிசூழ் உஞ்சையம் பதிபுக 
ஏரார் வழியில் எண்திசை தன்னைப் 

பாரா தேவா பனிமொழி நீயென 
வருங்கருங் குழலாள் மற்றும் உண் டோவெனத் 

திருந்துஇழை மடந்தை திரும்பினாள் பார்க்கக் 
களிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்டு 

ஒளிர்மணிப்பூணாள் உரவோ னுடனே 
இவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென 

அவ்வகை அரனும் அதற்கு உடன் பட்டு 
மதகரி யுரித்தோன் மதகரி யாக [170]

மதர்விழி உமைபிடி வடிவம் அதாகிக் 
கூடிய கலவியில் குவலயம் விளங்க 

நீடிய வானோர் நெறியுடன் வாழ 
அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச் 

செந்தழல் வேள்விவேத ஆகமம் சிறக்க 
அறம்பல பெருக மறம்பல சுருங்கத் 

திறம்பல அரசர் செகதலம் விளங்க 
வெங்கரி முகமும் வியன்புழைக்கையோடு 

ஐங்கர தலமு மலர்ப்பதம் இரண்டும் 
பவளத்து ஒளிசேர் பைந் துவர்வாயுந் [180]

தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டும் 
கோடி சூரியர்போற் குலவிடு மேனியும் 

பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும் 
நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங் 

கற்றைச் சடையுங் கனகநீண் முடியுந் 
தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய் 

ஐங்கரத்து அண்ணல் வந்துஅவ தரித்தலும் 
பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும் 

மங்கை மனமிக மகிழ்ந்து உடன் நோக்கி 
விண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும் [190]

மண்ணு ளோர்களும் வந்துஉனை வணங்க 
ஆங்குஅவர் தங்கட்கு அருள் சுரந்துஅருளித் 

தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப் 
பாரண மாகப் பலகனி யருந்தி 

ஏரணி ஆலின்கீழ் இனிதுஇரு என்று 
பூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக் 

காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும் 
மைவளர் சோலை மாநகர் புகுந்து 

தெய்வ நாயகன் சிறந்துஇனிது இருந்தபின் 
வான வராலும் மானு டராலும் [200]


"பிள்ளையார் கதை" - 3

[201-400] [இந்தப் பதிவில், ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதமுறை சொல்லப்பட்டிருக்கிறது]

கானமர் கொடிய கடுவி லங்காலுங் 
கருவி களாலுங் கால னாலும் 

ஒருவகை யாலும் உயிர ழியாமல் 
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில் 

வரம் பெறுகின்ற வலிமை யினாலே 
ஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக் 

கைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன் 
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி 

இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக் 
கொடுந் தொழில்புரியுங் கொடுமை கண்டு ஏங்கி [210]

அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங்
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி 

முறையிடக் கேட்டு முப்புர மெரித்தோன் 
அஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே 

அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி 
ஆனைமா முகத்து அவுணனோடு அவன்தன் 

சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது 
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி 

வென்றுவா வென்று விடைகொ டுத்தருள 
ஆங்குஅவன் தன்னோடு அமர்பல உடற்றிப் [220]

பாங்குறும் அவன்படை பற்றறக் கொன்றபின் 
தேர்மிசை யேறிச் சினங்கொடு செருவிற் 

கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல் 
ஒற்றைவெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற்

குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே 
சோர்ந்த வன்வீழ்ந்து துண்ணென எழுந்து

வாய்ந்த மூடிகமாய் வந்துஅவன் பொரவே
வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி 

எந்தை விநாயகன் ஏறினன் இப்பால் 
எறிந்த வெண்மருப்புஅங்கு இமைநொடி அளவில் [230]

செறிந்தது மற்றுஅவன் திருக்கரத் தினிலே 
வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும் 

வல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே 
ஒகையோடு எழுந்துஆங்குஉயர்படை சூழ 

வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற் 
கருச்சங் கோட்டிக் கயல்கமுகு ஏறும் 

திருச்செங் காட்டிற் சிவனை அர்ச்சித்துக் 
கணபதீச் சுரம் எனுங் காரண நாமம் 

கணபதி புகழ்தரு பதிக்குஉண் டாக்கிச் 
சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ [240]

இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க் 
கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி 

இணங்கிய பெருமைபெற்றுஇருந்திட ஆங்கே 
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர் 

யாவரும் வந்துஇவண் ஏவல் செய்திடுநாள் 
அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின் 

மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில் 
விநாயகற் குரிய விரதமென்று என்றெண்ணி

மனாதிகள் களித்து மரபொடு நோற்றார் 
இப்படி நோற்றிட் டெண்ணிய பெறுநாள் [250]

ஒப்பரும் விரதத்துஉறும்ஒரு சதுர்த்தியில்
நோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப் 

போற்றி செய்திட்டார் புலவர் ஐங்கரனை 
மருமலர் தூவும் வானவர் முன்னே 

நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்
அனைவருங் கைதொழுது அடிஇணை போற்ற 

வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமுந்

தாழ்துளைக் கையும் தழைமுறச் செவியுங்
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங் [260]

கொண்டனன் சீற்றம் குபேரனை நோக்கி 
என்னைக் கண்டுஇங்கு இகழ்ந்தனை சிரித்தாய்

உன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்திற்
பழியொடு பாவமும் பலபல விதனமும் 

அழிவும் எய்துவர் என்று அசனிபோற் சபித்தான் 
விண்ணவ ரெல்லாம் மிகமனம் வெருவிக் 

கண்ணருள் கூருங் கடவுள் இத் தினத்திற் 
கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்

மார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ் 
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென் [270]

இதயத்து எண்ணி யாவரும் நோற்றார்.
இப்புவி மாந்தர் இயம்பிய விரதம் 

வைப்புடன் நோற்ற வகைஇனிச் சொல்வாம் 
குருமணி முடிபுனை குருகுலத்து உதித்த 

தருமனும் இளைய தம்பி மார்களுந் 
தேவகி மைந்தன் திருமுக நோக்கி 

எண்ணிய விரதம் இடையூ றின்றிப்
பண்ணிய பொழுதே பலிப்பு உண் டாகவுஞ் 

செருவினில் எதிர்ந்த செறுநரை வென்று 
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் [280]

எந்தத் தெய்வம் எவ்விர தத்தை 
வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப் 

பாட்டுஅளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
கேட்டருள் வீர் எனக் கிளர்த்துத லுற்றான்

அக்கு நீறணியும் அரன்முதல் அளித்தோன் 
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி 

ஓடவைத் திடும்பொன் ஒத்துஒளி விளங்குங்
கோடி சூரியர்போற் குலவிய மேனியன் 

கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன் 
தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன் [290] 

சர்வா பரணமுந் தரிக்கப் பெற்றவன் 
உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்

ஒருகையில் தந்தம் ஒருகையிற் பாசம்
ஒருகையின் மோதகம் ஒருகையிற் செபஞ்செய் 

உத்தம மாலையோன் உறுநினை வின்படி 
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன் 

என்றுஇமை யவரும் யாவருந் துதிப்ப
நன்றி தரும்திரு நாமம் படைத்தோன்

புரவலர்க் காணப் புறப்படும் போதுஞ் 
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் [300] 

வித்தி யாரம்பம் விரும்பிடும் போதும்
உத்தி யோகங்கள் உஞற்றிடும் போதும்

ஆங்கவன் தன்னை அருச்சனை புரிந்தாற் 
தீங்குஉறாது எல்லாஞ் செயம் உண் டாகும் [304]

கரதலம் ஐந்துக் கணபதிக்கு உரிய 
விரதமொன்று உளதை விரும்பி நோற்றவர்க்குச் 

சந்ததி தழைத்திடுஞ் சம்பத் துண்டாம் 
புந்தியில் நினைந்த பொருள்கை கூடும் 

மேலவர் தமையும் வென்றிட லாமெனத் 
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு [310]

நுவலரும் விரதம் நோற்றிடு மியல்பும் 
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும் 

விரித்தெமக்கு உரைத்திட வேண்டுமென்று இரப்ப 
வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான் 

தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர் 
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின் 

முந்தும் புலரியின் முறைநீர் படிந்து 
சந்தி வந்தனந் தவறாது இயற்றி
[புலரி=விடியல்]

அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப் 
பத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் [320]

வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்தன் 
ஒள்ளிய அருள்திரு உருவுண் டாக்கிப்
[ஒள்ளிய=ஒளிவிளங்கும்] 

பூசனை புரியப் புகன்றனர் பெரியோர் 
ஆசுஇலா மண்ணால் அமைத்தலுந் தகுமால்
[ஆசு=குற்றம்] 

பூசனஞ் செயுமிடம் புனித மாக்கி 
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
[மஞ்சரி=பூங்கொத்து] 

கோடிகம் கோசிகம் கொடிவிதா னித்து 
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
[கோடிகம், கோசிகம்=துணி, ஆடை]

விந்தைசேர் சித்தி விநாயக னுருவைச் 
சிந்தையில் நினைந்து தியானம் பண்ணி [330]

ஆவா கனம் முதல் அர்க்கிய பாத்தியம் 
வாகார் ஆச மனம்வரை கொடுத்து 

ஐந்துஅமிர் தத்தால் அபிடே கித்துக் 
கந்தம் சாத்திக் கணேச மந்திரத்தால் 

ஈசுர புத்திரன் என்னும் மந்திரத்தால் 
மாசுஅகல் இரண்டு வத்திரஞ் சாத்திப் 

பொருந்துஉமை சுதனாப் புகலுமந் திரத்தால் 
திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
[பளிதம்=கற்பூரம்]

பச்சறுகு உடன் இரு பத்தொரு விதமாப் 
பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே [340]

உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன் 
குமார குரவன் பாசாங் குசகரன் 

ஏக தந்தன் ஈசுர புத்திரன் 
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன் 

சர்வ காரியமுந் தந்தருள் புரிவோன் 
ஏரம்ப மூர்த்தி யென்னும் நாமங்களால் 

ஆரம் பத்துடன் அர்ச்சனை பண்ணி 
மோதகம் அப்பம் முதற்பணி காரந் 

தீதுஅகல் மாங்கனி தீங்கத லிப்பழம் 
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு

[வருக்கை=வருக்கைப்பலா, கபித்தம்=விளாம்பழம்] [350]

தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய் 
பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்

[நெட்டிலைத் தாழை=வெற்றிலை, முப்புடைக்காய்=[மூன்று பிரிவுகளை உடைய] தேங்காய்; பொரிக்கறி=புளியிடாமல் பொரித்த கறி; போனகம்=சோறு] 

விருப்புள சுவைப்பொருள் மிகவும் முன்வைத்து 
உருத்திரப் பிரியஎன்று உரைக்கும் மந்திரத்தால் 

நிருந்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து 
நற்றவர் புகன்ற நா னான்குஉப சாரமும் 

[நானான்கு உபசாரம்= பதினாறு வகையான உபசார ஆவாஹனம், தாபனம், சந்நிதானம், ஸந்நிரோதனம், அவகுண்டனம். தேனுமுத்திரை, பாத்யம், ஆசமநியம், அர்க்யம், புஷ்பதானம்,தூபம்,தீபம்,சைவேத்யம்,பாநீயம்,ஜபஸமர்ப்பணை,ஆராத்திரிகம்.]

மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து 
எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு 

உண்அறு சுவைசேர் ஓதனம் நல்கிச் 
சந்தன முத்துத் தானந் தக்கிணை
[தக்கிணை=தட்சணை] [360]

அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத் 
திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத் 

தரித்த வத் திரத்துடன் தானமாக் கொடுத்து 
நைமித் திகம் என நவில்தரு மரபால் 

[நைமித்திகம்= முறையாக விசேஷ காலங்களில் செய்யப்படும் விழா]

இம்முறை பூசனை யாவர் செய்தலும் 
எண்ணிய கருமம் யாவையு முடிப்பர் 

திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர்
அரன் இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப்

[செரு=போர்] 

புரமொரு மூன்றும் பொடிபட எரித்தான் 
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி [370]

விருத் திராசுரனை வென்றுகொன் றிட்டான் 
அகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப்

பகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்
தண்ணார் மதிமுகத் தாள் தமயந்தி
[பகர்=ஒளி] 

அன்னான் இவனை அர்ச்சனை பண்ணி 
நண்ணார் பரவு நளனை அடைந்தாள்

ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி 
வெங்கத நிருதரை வேரறக் களைந்து

தசரதன் மைந்தன் சீதையை யடைந்தான் 
பகிரத னென்னும் பார்த்திவன் இவனை [380]

மதிதலந் தன்னின் மலர்கொடு அர்ச்சித்து 
வரநதி தன்னை வையகத்து அழைத்தான்
[வரநதி=கங்கை] 

அட்ட தேவதைகளும் அர்ச்சித்து இவனை
அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார் 

உருக்மணி யென்னும் ஒண்டொடி தன்னைச்
செருக்கொடு வவ்விச் சிசுபா லன்தான் 

[ஒண்டொடி= ஒள்+தொடி= ஒளி பொருந்திய கைவளைகளை அணிந்தவள், [வவ்வு=கொள்ளையிடு, கவர்தல்] 

கொண்டு போம் அளவிற் குஞ்சர முகனை
வண்டு பாண்மிழற்றா மலர்கொடு அர்ச்சித்துத்

[பாண்=கள்] 

தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு 
யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம் [390]

புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார் 

[புகர்முகம்=புள்ளிகள் நிறைந்த முகம் உடைய யானை]

இப்புவி தன்னில் எண்ணிலர் உளரால் 
அப்படி நீவிரும் அவனை யர்ச்சித்தால் 

எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர்
என்றுகன் றெரிந்தோன் எடுத்திவை உரைப்ப 

[கன்றெறிந்தோன்= திருமால், 'கன்று குணிலா எறிந்தோய் கழல் போற்றி']

அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப்
பூசனை புரிந்து கட் புலன் இலான் மைந்தரை

[கட் புலன் இலான்= கண்பார்வை இல்லாத திருதாஷ்டிரன்] 

நாசனம் பண்ணி நராதிபர் ஆகிச்
சிந்தையில் நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு [400]...!!!
பிள்ளையார் கதை பாடல்...!!!
இப் பாடலை 21 நாளும் விரதமிருந்து துதி
செய்ய நினைத்த காரியம் கைகூடும் .சகல
செல்வயோகம் மிக்க பெரு வாழ்வு வாழலாம் ..!!!

திருமுறைகளை இலவசமாக பதிவிறக்கம்

திருமுறைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய

இங்கு தேவாரம் & திருமுறை பாடல்களை பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் கேட்கலாம்

சங்கப் புலவர் பெயர்கள் அகரவரிசை:

Foto: சங்கப் புலவர் பெயர்கள் அகரவரிசை: 
..
1) அகம்பன் மாலாதனார்
2) அஞ்சியத்தை மகள் நாகையார்
3) அஞ்சில் அஞ்சியார்
4) அஞ்சில் ஆந்தையார்
5) அடைநெடுங்கல்வியார்
6) அணிலாடு முன்றிலார்
7) அண்டர் மகன் குறுவழுதியார்
 அதியன் விண்ணத்தனார்
9) அதி இளங்கீரனார்
10) அம்மூவனார்
11) அம்மெய்நாகனார்
12) அரிசில் கிழார்
13) அல்லங்கீரனார்
14) அழிசி நச்சாத்தனார்
15) அள்ளூர் நன்முல்லையார்
16) அறிவுடைநம்பி
17) ஆரியன் பெருங்கண்ணன்
18) ஆடுதுறை மாசாத்தனார்
19) ஆதிமந்தி
20) ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்
21) ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
22) ஆலங்குடி வங்கனார்
23) ஆலத்தூர் கிழார்
24) ஆலம்பேரி சாத்தனார்
25) ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
26) ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
27) ஆவூர்கிழார்
28) ஆலியார்
29) ஆவூர் மூலங்கீரனார்
30) இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
31) இடைக்காடனார்
32) இடைக்குன்றூர்கிழார்
33) இடையன் சேந்தன் கொற்றனார்
34) இடையன் நெடுங்கீரனார்
35) இம்மென்கீரனார்
36) இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
37) இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
38) இருந்தையூர்க் கொற்றன் புலவன்
39) இரும்பிடர்தலையார்
40) இளங்கீரந்தையார்
41) இளங்கீரனார்
42) இளநாகனார்
43) இளந்திரையன்
44) இளந்தேவனார்
45) இளம்புல்லூர்க் காவிதி
46) இளம்பூதனார்
47) இளம்பெருவழுதி
48) இளம்போதியார்
49) இளவெயினனார்
50) இறங்குடிக் குன்றநாடன்
51) இறையனார்
52) இனிசந்த நாகனார்
53) ஈழத்துப் பூதந்தேவனார்
54) உகாய்க் குடிகிழார்
55) உக்கிரப் பெருவழுதி
56) உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
57) உம்பற்காட்டு இளங்கண்ணனார்
58) உருத்திரனார்
59) உலோச்சனார்
60) உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
61) உழுந்தினைம் புலவர்
62) உறையனார்
63) உறையூர் இளம்பொன் வாணிகனார்
64) உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
65) உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
66) உறையூர்ச் சல்லியங் குமரனார்
67) உறையூர்ச் சிறுகந்தனார்
68) உறையூர்ப் பல்காயனார்
69) உறையூர் மருத்துவன் தாமோதரனார்
70) உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
71) ஊட்டியார்
72) ஊண்பித்தை
73) ஊண்பொதி பசுங்குடையார்
74) எயிற்றியனார்
75) எயினந்தையார்
76) எருமை வெளியனார்
77) எருமை வெளியனார் மகனார் கடலனார்
78) எழூப்பன்றி நாகன் குமரனார்
79) ஐயாதி சிறு வெண்ரையார்
80) ஐயூர் முடவனார்
81) ஐயூர் மூலங்கீரனார்
82) ஒக்கூர் மாசாத்தனார்
83) ஒக்கூர் மாசாத்தியார்
84) ஒருசிறைப் பெரியனார்
85) ஒரூத்தனார்
86) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
87) ஓதஞானி
88) ஓதலாந்தையார்
89) ஓரம்போகியார்
90) ஓரிற்பிச்சையார்
91) ஓரேர் உழவர்
92) ஔவையார்
93) கங்குல் வெள்ளத்தார்
94) கச்சிப்பேடு இளந்தச்சன்
95) கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
96) கச்சிப்பேடு பெருந்தச்சனார்
97) கடம்பனூர்ச் சாண்டில்யன்
98) கடலூர்ப் பல்கண்ணனார்
99) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
100) கடுந்தொடைக் காவினார்
101) கடுந்தொடைக் கரவீரன்
102) கடுவன் இளமள்ளனார்
103) கடுவன் இளவெயினனார்
104) கடுவன் மள்ளனார்
105) கணக்காயன் தத்தனார்
106) கணியன் பூங்குன்றனார்
107) கண்ணகனார்
108) கண்ணகாரன் கொற்றனார்
109) கண்ணங்கொற்றனார்
110) கண்ணம் புல்லனார்
111) கண்ணனார்
112) கதக்கண்ணனார்
113) கதப்பிள்ளையார்
114) கந்தரத்தனார்
115) கபிலர்
116) கயத்தூர்கிழார்
117) கயமனார்
118) கருங்குழலாதனார்
119) கரும்பிள்ளைப் பூதனார்
120) கருவூர்க்கிழார்
121) கருவூர் கண்ணம்பாளனார்
122) கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
123) கருவூர் கலிங்கத்தார்
124) கருவூர் கோசனார்
125) கருவூர் சேரமான் சாத்தன்
126) கருவூர் நன்மார்பனார்
127) கருவூர் பவுத்திரனார்
128) கருவூர் பூதஞ்சாத்தனார்
129) கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
130) கல்பொருசிறுநுரையார்
131) கல்லாடனார்
132) கவைமகன்
133) கழாத்தலையார்
134) கழார்க் கீரனெயிற்றியனார்
135) கழார்க் கீரனெயிற்றியார்
136) கழைதின் யானையார்
137) கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
138) கள்ளில் ஆத்திரையனார்
139) காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
140) காசிபன் கீரன்
141) காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
142) காப்பியஞ்சேந்தனார்
143) காப்பியாற்றுக் காப்பியனார்
144) காமஞ்சேர் குளத்தார்
145) காரிக்கிழார்
146) காலெறி கடிகையார்
147) காவட்டனார்
148) காவற்பெண்டு
149) காவன்முல்லையார்
150) காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
151) காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
152) காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
153) காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
154) காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் 
நப்பூதனார்
155) கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
156) கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
157) கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
158) கிள்ளிமங்கலங்கிழார்
159) கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
160) கீரங்கீரனார்
161) கீரந்தையார்
162) குடபுலவியனார்
163) குடவாயிற் கீரத்தனார்
164) குட்டுவன் கண்ணனார்
165) குட்டுவன் கீரனார்
166) குண்டுகட் பாலியாதனார்
167) குதிரைத் தறியனார்
168) குப்பைக் கோழியார்
169) குமட்டூர் கண்ணனார்
170) குமுழிஞாழலார் நப்பசலையார்
171) குழற்றத்தனார்
172) குளம்பனார்
173) குளம்பாதாயனார்
174) குறமகள் இளவெயினி
175) குறமகள் குறியெயினி
176) குறியிறையார்
177) குறுங்கீரனார்
178) குறுங்குடி மருதனார்
179) குறுங்கோழியூர் கிழார்
180) குன்றம் பூதனார்
181) குன்றியனார்
182) குன்றூர்க் கிழார் மகனார்
183) கூகைக் கோழியார்
184) கூடலூர்க் கிழார்
185) கூடலூர்ப பல்கண்ணனார்
186) கூவன்மைந்தன்
187) கூற்றங்குமரனார்
188) கேசவனார்
189) கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
190) கொட்டம்பலவனார்
191) கொல்லன் அழிசி
192) கொல்லிக் கண்ணன்
193) கொள்ளம்பக்கனார்
194) கொற்றங்கொற்றனார்
195) கோக்குளமுற்றனார்
196) கோடைபாடிய பெரும்பூதன்
197) கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
198) கோட்டியூர் நல்லந்தையார்
199) கோண்மா நெடுங்கோட்டனார்
200) கோப்பெருஞ்சோழன்
201) கோவர்த்தனர்
202) கோவூர்க் கிழார்
203) கோவேங்கைப் பெருங்கதவனார்
204) கோழிக் கொற்றனார்
205) கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
206) கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
207) சங்கவருணர் என்னும் நாகரியர்
208) சத்திநாதனார்
209) சல்லியங்குமரனார்
210) சாகலாசனார்
211) சாத்தந்தந்தையார்
212) சாத்தனார்
213) சிறுமோலிகனார்
214) சிறுவெண்டேரையார்
215) சிறைக்குடி ஆந்தையார்
216) சீத்தலைச் சாத்தனார்
217) செங்கண்ணனார்
218) செம்பியனார்
219) செம்புலப்பெயல்நீரார்
220) செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
221) செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
222) செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
223) செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
224) சேந்தங்கண்ணனார்
225) சேந்தம்பூதனார்
226) சேந்தங்கீரனார்
227) சேரமானெந்தை
228) சேரமான் இளங்குட்டுவன்
229) சேரமான் கணைக்கால் இரும்பொறை
230) சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
231) சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
232) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
233) சோழன் நலங்கிள்ளி
234) சோழன் நல்லுருத்திரன்
235) தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
236) தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
237) தனிமகனார்
238) தாமாப்பல் கண்ணனார்
239) தாமோதரனார்
240) தாயங்கண்ணனார்
241) தாயங்கண்ணியார்
242) திப்புத்தோளார்
243) திருத்தாமனார்
244) தீன்மதிநாகனார்
245) தும்பிசேர்கீரனார்
246) துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
247) துறையூர்ஓடைக்கிழார்
248) தூங்கலோரியார்
249) தேய்புரி பழங்கயிற்றினார்
250) தேரதரன்
251) தேவகுலத்தார்
252) தேவனார்
253) தொடித்தலை விழுத்தண்டினர்
254) தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
255) தொல்கபிலர்
256) நக்கண்ணையார்
257) நக்கீரர்
258) நப்பசலையார்
259) நப்பண்ணனார்
260) நப்பாலத்தனார்
261) நம்பிகுட்டுவன்
262) நரிவெரூத்தலையார்
263) நரைமுடி நெட்டையார்
264) நல்லச்சுதனார்
265) நல்லந்துவனார்
266) நல்லழிசியார்
267) நல்லாவூர்க் கிழார்
268) நல்லிறையனார்
269) நல்லுருத்திரனார்
270) நல்லூர்ச் சிறுமேதாவியார்
271) நல்லெழுநியார்
272) நல்வழுதியார்
273) நல்விளக்கனார்
274) நல்வெள்ளியார்
275) நல்வேட்டனார்
276) நற்சேந்தனார்
277) நற்றங்கொற்றனார்
278) நற்றமனார்
279) நன்பலூர்ச் சிறுமேதாவியார்
280) நன்னாகனார்
281) நன்னாகையார்
282) நாகம்போத்தன்
283) நாமலார் மகன் இளங்கண்ணன்
284) நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
285) நெடுங்கழுத்துப் பரணர்
286) நெடும்பல்லியத்தனார்
287) நெடும்பல்லியத்தை
288) நெடுவெண்ணிலவினார்
289) நெட்டிமையார்
290) நெய்தற் கார்க்கியார்
291) நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
292) நெய்தற்றத்தனார்
293) நொச்சி நியமங்கிழார்
294) நோய்பாடியார்
295) பக்குடுக்கை நன்கணியார்
296) படுமரத்து மோசிகீரனார்
297) படுமரத்து மோசிக்கொற்றனார்
298) பதடிவைகலார்
299) பதுமனார்
300) பரணர்
301) பராயனார்
302) பரூஉமோவாய்ப் பதுமனார்
303) பறநாட்டுப் பெருங்கொற்றனார்
304) பனம்பாரனார்
305) பாண்டரங்கண்ணனார்
306) பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
307) பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
308) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற 
நெடுஞ்செழியன்
309) பாண்டியன் பன்னாடு தந்தான்
310) பாண்டியன் மாறன் வழுதி
311) பாரதம் பாடிய பெருந்தேவனார்
312) பாரிமகளிர்
313) பார்காப்பான்
314) பாலைக் கௌதமனார்
315) பாலை பாடிய பெருங்கடுங்கோ
316) பாவைக் கொட்டிலார்
317) பிசிராந்தையார்
318) பிரமசாரி
319) பிரமனார்
320) பிரான் சாத்தனார்
321) புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
322) புல்லாற்றூர் எயிற்றியனார்
323) பூங்கணுத் திரையார்
324) பூங்கண்ணன்
325) பூதங்கண்ணனார்
326) பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
327) பூதம்புல்லனார்
328) பூதனார்
329) பூதந்தேவனார்
330) பெருங்கண்ணனார்
331) பெருங்குன்றூர்க் கிழார்
332) பெருங்கௌசிகனார்
333) பெருஞ்சாத்தனார்
334) பெருஞ்சித்திரனார்
335) பெருந்தலைச்சாத்தனார்
336) பெருந்தேவனார்
337) பெருந்தோட் குறுஞ்சாத்தன்
338) பெரும் பதுமனார்
339) பெரும்பாக்கன்
340) பெருவழுதி
341) பேயனார்
342) பேய்மகள் இளவெயினி
343) பேராலவாயர்
344) பேரிசாத்தனார்
345) பேரெயின்முறுவலார்
346) பொதுக்கயத்துக் கீரந்தை
347) பொதும்பில் கிழார்
348) பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
349) பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
350) பொத்தியார்
351) பொய்கையார்
352) பொருந்தில் இளங்கீரனார்
353) பொன்மணியார்
354) பொன்முடியார்
355) பொன்னாகன்
356) போதனார்
357) போந்தைப் பசலையார்
358) மடல் பாடிய மாதங்கீரனார்
359) மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
360) மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
361) மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
362) மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
363) மதுரை இனங்கௌசிகனார்
364) மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
365) மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
366) மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
367) மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
368) மதுரைக் கணக்காயனார்
369) மதுரைக் கண்டராதித்தனார்
370) மதுரைக் கண்ணத்தனார்
371) மதுரைக் கவுணியன் பூதத்தனார்
372) மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
373) மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
374) மதுரைக் காருலவியங் கூத்தனார்
375) மதுரைக் கூத்தனார்
376) மதுரைக் கொல்லன் புல்லன்
377) மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
378) மதுரைச் சுள்ளம் போதனார்
379) மதுரைத் தத்தங்கண்ணனார்
380) மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
381) மதுரைத் தமிழக் கூத்தனார்
382) மதுரைப் படைமங்க மன்னியார்
383) மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
384) மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
385) மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
386) மதுரைப் புல்லங்கண்ணனார்
387) மதுரைப் பூதனிள நாகனார்
388) மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
389) மதுரைப் பெருங்கொல்லன்
390) மதுரைப் பெருமருதனார்
391) மதுரைப் பெருமருதிளநாகனார்
392) மதுரைப் போத்தனார்
393) மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
394) மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
395) மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
396) மதுரை வேளாசன்
397) மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
398) மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
399) மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
400) மருதம் பாடிய இளங்கடுங்கோ
401) மருதனிளநாகனார்
402) மலையனார்
403) மள்ளனார்
404) மாங்குடிமருதனார்
405) மாடலூர் கிழார் 
406) மாதீர்த்தன்
407) மாமிலாடன்
408) மாமூலனார்
409) மாயேண்டன்
410) மார்க்கண்டேயனார்
411) மாலைமாறன்
412) மாவளத்தன்
413) மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
414) மாறோக்கத்து நப்பசலையார்
415) மாற்பித்தியார்
416) மிளைக் கந்தன்
417) மிளைப் பெருங்கந்தன்
418) மிளைவேள் பித்தன்
419) மீனெறி தூண்டிலார்
420) முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
421) முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
422) முடத்தாமக்கண்ணியார்
423) முடத்திருமாறன்
424) முதுகூத்தனார்
425) முதுவெங்கண்ணனார்
426) முப்பேர் நாகனார்
427) முரஞ்சியயூர் முடிநாகராயர்
428) முள்ளியூர்ப் பூதியார்
429) முலங்கீரனார்
430) மையோடக் கோவனார்
431) மோசிக்கண்ணத்தனார்
432) மோசிக்கீரனார்
433) மோசிக்கொற்றன்
434) மோசிக்கரையனார்
435) மோசிசாத்தனார்
436) மோசிதாசனார்
437) வடநெடுந்தத்தனார்
438) வடவண்ணக்கன் தாமோதரன்
439) வடமோதங்கிழார்
440) வருமுலையாரித்தி
441) வன்பரணர்
442) வண்ணக்கன் சோருமருங்குமரனார்
443) வண்ணப்புறக் கந்தரத்தனார்
444) வாடாப்பிராந்தன்
445) வாயிலான் தேவன்
446) வாயிலிலங்கண்ணன்
447) வான்மீகியார்
448) விட்டகுதிரையார்
449) விரிச்சியூர் நன்னாகனார்
450) விரியூர் நன்னாகனார்
451) வில்லக விரலினார்
452) விழிகட்பேதை பெருங்கண்ணனார்
453) விற்றூற்று மூதெயினனார்
454) விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
455) வினைத் தொழில் சோகீரனார்
456) வீரை வெளியனார்
457) வீரை வெளியன் தித்தனார்
458) வெண்கண்ணனார்
459) வெண்கொற்றன்
460) வெண்ணிக் குயத்தியார்
461) வெண்பூதன்
462) வெண்பூதியார்
463) வெண்மணிப்பூதி
464) வெள்ளாடியனார்
465) வெள்ளியந்தின்னனார்
466) வெள்ளிவீதியார்
467) வெள்வெருக்கிலையார்
468) வெள்ளைக்குடி நாகனார்
469) வெள்ளைமாளர்
470) வெறிபாடிய காமக்கண்ணியார்
471) வேட்டகண்ணன்
472) வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
473) வேம்பற்றுக் குமரன்

தொகுப்பு -முனைவர் இரா.குணசீலன்
சங்கப் புலவர் பெயர்கள் அகரவரிசை:
..
1) அகம்பன் மாலாதனார்
2) அஞ்சியத்தை மகள் நாகையார்
3) அஞ்சில் அஞ்சியார்
4) அஞ்சில் ஆந்தையார்

வியாழன், 21 நவம்பர், 2013

ஐயப்பன் 108 சரணகோஷம்.


மாலை அணிந்த ஸ்வாமிமார்கள் இந்த சரணகோஷத்தை தினமும் காலை,மாலை இரண்டு வேளையும் நீராடிவிட்டு ஜயப்பனிற்கு பால்,பழம்,கற்கண்டு முதலியவற்றை நிவேதனம் செய்து சரணம் சொல்லி வழிபடவேண்டும்.

ஐயப்பன் விரதம்

ஐயப்பன் விரத விதிமுறைகள்.

1-முதன் முறை மாலை அணியும் பக்தர் கன்னி ஸ்வாமி என அழைப்பார்கள்.2-ஜந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்குச் சென்றவாராயும், ஜயப்பனின் விரதமுறையை நன்கு உணர்ந்தவராயும்,பொறுமையும் ஆசாரசீலராகவும் உள்ள ஒருவரை குருஸ்வாமியாய் ஏற்று தாய்,தந்தையரை வணங்கி குருவின் கையால் மாலை அணிதல் வேண்டும்.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

வாரியார் சுவாமிகளின் கந்தபுராண தொடர் சொற்பொழிவு


வாரியார் சுவாமிகளின் கந்தபுராண தொடர் சொற்பொழிவு

முருகன் திரு அவதாரம்

|Track details|
  • வேல் பெற்று விடைபெறுதல்
|Track details|
  • வீரபாகு தேவர் தூது
|Track details|
  • சூர பதுமன் பெருவாழ்வு
|Track details|
  • தெய்வயானை,வள்ளி திருமணம்
|Track details|
Kripananda Variar discourse on Arunagirinathar
Kripananda Variar discourse on Arunagirinathar
Kripananda Variar at puja, Madurai 1987